Saturday, September 22, 2018

The Teacher gave a punishment to the student and asked him to write 

"I Will Not Throw Paper Airplanes in the Class" 
500 times on the black board.

And the student wrote 

. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
. 
cid:1.3813971271@web50503.mail.re2.yahoo.com
Born to Be a Software engineer :-)

Sunday, August 12, 2018

கருணாநிதி உடல் நகர்ந்து செல்லும் காட்சி | Karunanidhi body moving

ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல் கண்ணாடி பேழைக்குள் நகர்ந்து செல்லும் காட்சி. சரியான பாதுகாப்பு வசதிகள், முன்னேற்பாடு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாத எடப்பாடி அரசின் மெத்தனத்தால் கூட நெரிசல் ஏற்பட்டது. இரண்டு பேர் உயிர் இழந்தனர். நாட்டின் பிரதமருக்கு வழங்க வேண்டிய சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்படும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சரிவர பாதுகாப்பு வழங்கவில்லை.





கூட்ட நெரிசலை சரிவர கட்டுப்படுத்த இயலாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அணைத்து தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

அதே நேரத்தில், புரட்சித்தலைவி அம்மா இறந்த பொழுது சட்ட ஒழுங்கையும், ராஜாஜி மண்டபத்தில் திரண்ட கூட நெரிசலையும் தன ஆளுமையால் கட்டுக்குள் வைத்திருந்த திருமதி.சசிகலா நடராஜன் அவர்களை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

Saturday, August 11, 2018

RKNagar தேர்தலில் கூட்டனி பலம் அதிகம் இருந்தும் திமுக டெப்பாஸிட் கூட வாங்கததற்கு என்ன காரணம் தெரியுமா?

Lenin Veera Pandiyan

#RKNagar தேர்தலில் கூட்டனி பலம் அதிகம் இருந்தும் #திமுக டெப்பாஸிட் கூட வாங்கததற்கு என்ன காரணம்...
1. #TTVDhinakaran'க்கு மக்களுடைய ஆதரவு
2. பணம்
"பணம் தான் காரணம்னு நாங்களே சொல்ரோமே"... கொஞ்சம் பொறுங்கள் உடன் பிறப்புகளே, திமுக - பணம் இது இரண்டுக்கும் நான் பார்க்கும் கோணம் வேறு...தொடர்ந்து படியுங்கள்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் படத்திற்காக ஒருபோதும் தன் கொள்கையை விட்டுதர மாட்டார். அப்படிப்பட்ட ஒரு கொள்கை தான் அறிஞர் அண்ணாவின் "திமுக". தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் திமுக கொடியின் கருப்பு சிவப்பு நிறம் தன் சட்டையிலோ, அறையின் வர்ணங்களிலோ இருக்கும். படத்தில் புரட்சித்தலைவரின் பெயர் உதயசூரியன், கதிரவன் என்று இருக்கும். பாடல்களில் கூட திமுக சின்னமான சூரியன் இருக்கும்.
"உதய சூரியனின் பார்வையிலே" - அன்பே வா, 
அன்பே வா படத்தில் மக்கள் திலகம் 

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" - அரசகட்டளை,
"சூரியன் உதிசதுங்க, இங்கே காரிருள் மறைஞ்சதுங்க" - நம்நாடு. அண்ணாவின் புகைப்படங்கள், சிலைகள் தன் படங்களில் கண்டிப்பாக வைத்திருப்பார்.

அடிமைப்பெண் படத்தில் சூரியன் சின்னத்தை தன் நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் புரட்சித்தலைவர் 

ஏன் தன் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படமான 'நடோடி மன்னன்' படத்தின் ஆரம்பத்தில் அவர் நிறுவனத்தின் லோகோவின் மேல் திமுக கொடி இருக்கும். திமுகவை தன் படத்தில் தூக்கி நிறுத்தியதற்காக தான் எம்.ஆர்.ராதா சுட்ட துப்பாகி குண்டை தன் கழுத்தில் சுமந்தார் நம் மக்கள் திலகம். இப்படி அவர் உயிரைக்கொடுத்து பட்டி தொட்டி எங்கும் திமுகவை அதன் சின்னமான உதயசூரியனை மக்களின் மனதில் பதிய செய்தார்.



எம்ஜிஆர் pictures logo 


ஆனால், பல தியாகிகள் உயிர்த்தியாகம் செய்து வளர்த்த திமுக என்னும் மாபெரும் கழகத்தை தன் சுய லாபத்திற்காக பயன்படுத்திய கருணாநிதியின் பேரன் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தன் ஒரு படத்திலாவது தங்கள் கட்சியை, சின்னத்தை அல்லது அண்ணாவின் கொள்கையை மக்களிடம் எடுத்துச்சென்றிருப்பாரா? உதயநிதி ஸ்டாலினின் ஒரு படத்திலாவது அண்ணாவின் படமோ அல்லது தங்கள் கட்சி தலைவர் கருணாநிதியின் படமோ இடம் பெற்றிருக்குமா? அப்படி கருணாநிதியின் படமோ திமுக கொடியோ உதயநிதி ஸ்டாலின் தன் படத்தில் தூக்கிபிடித்து இருந்தால் கட்சி முத்திரை குத்தி மற்ற கட்சியின் உன்மை விசுவாசிகள் அந்த படத்தை புறக்கணிப்பர், பிறகு எப்படி கோடிகளில் லாபம் ஈட்டுவது?
கொள்கைகள் அல்ல கோடிகள் தான் முக்கியம் என்று பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கருணாநிதி, கருணாநிதி மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி போன்றோர் செயல்பட்டதின் விளைவே RKNagarல் டெப்பாஸிட் கூட வாங்காமல் போனதிற்கு காரணம்.
திமுக தலைவர்கள் அவர்கள் வாரிசுகள் பணத்தின் மேல் கொண்ட மோகம் தான் திமுகவின் வீழ்ச்சிக்கு காரணம்.

பாவம் அப்பாவி தொண்டர்கள்... 

Saturday, June 11, 2016

எண்ணங்கள்


அணுக்கள் ஒன்றுதான் 
எல்லா பொருள்களிலும்; கல்லிலும் மலரிலும்...
அணுக்கருத் துகள்களும், எலக்ட்ரான்களின் 
எண்ணிக்கைகளும் தான் பொருள்களின் தன்மையை மாற்றுகின்றன. 
எண்ணிக்கைகள் பொருள்களின் தன்மையை மாற்றுமானால் 
நல் எண்ணங்கள் நம் தரத்தை மாற்றாதோ!! 
நம் வாழ்வைத்தான் உயர்த்தாதோ!!  

Saturday, January 31, 2015

யார் குற்றம்? | whose offence?

மது அருந்திவிட்டு நடுவீதியில் மயங்கிக்கிடப்பது அந்த மாணவனின் குற்றமா? இல்லை குடியை கெடுக்கும் மதுவினை காசுக்காக கடை போட்டு விற்கும் அரசின் குற்றமா? வளர்ந்து வரும் இளைய சமுதாயம் தங்களை பின்பற்றுகிறார்கள் என்று தெரிந்தும் பணத்திற்காக பண்பாடில்லாமல் திரையில் நடிகனை நடிக்கவைக்கும் திரைத்துறையின் குற்றமா? வல்லவனாக வளரும் தன் பிள்ளை நல்லவனாகவும் வளர வேண்டும் என்பதனை மறந்து மதிப்பெண்களை மட்டும் பார்க்கும் பெற்றோர்களின் குற்றமா?  அம் மதிப்பெண்களை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு மாணவர்களை இயந்திரங்களாக மாற்றும் கல்வி முறையில் குற்றமா? அல்லது தாங்கள் தான் மாணவர்களின் இரண்டவது பெற்றோர்கள் என்பதை மறந்த ஆசிரியர்களின் குற்றமா? யார் குற்றம்?

Translation:
Is drinking alcohol is the offence done by the student? Or the offence that had done by the government which forgot about the people and running the government from the money earned by selling alcohol? Or the offence done by the cinema actors who encourages drinking alcohols in their movies only for money and forgot that young generations are following them? Or the offence did by parents who are concerning only on their talents and marks but forgot the self-discipline and self-esteem? Or the offence by the school teacher who forget that they are the second parents to the children? Or the offence by the education system which is making student as machine and change education as business? Whose offence is this?   

Aam Aadmi Party Manifesto for Delhi Assembly Polls - 2015 | #AAPKaManifesto

Thursday, January 29, 2015

Awesome Fish tank with relaxing music [Video]

This video was taken at artificial fountain and aquarium at Infosys, Hyderabad. Keep your mind and soul relax by watching this video.